Pages

சும்மா நீட்டிக்கிட்டே போகாம நச்சுன்னு நாலு வார்த்தை..எது எது இப்போதைக்கு கண்ணைக் குத்துதோ அத இங்க‌ வந்து ஆத்திக்கலாம்.

பஞ்சாயத்து ஆகாத வெரசங் கெட்டதுக எதுவெல்லாம் இருக்கோ அத இங்க‌ உண்டு இல்ல பண்ணலாம்னு நாமளும் ஒரு போர்டு போட்டுக்கிட்டு...

சும்மா நீட்டிக்கிட்டே போகாம நச்சுன்னு நாலு வார்த்த

Thursday, June 10, 2010

செபம்

கர்த்தரின் மாதாவே க‌ற்றுத் தாரும், ஆண்டவரே பெற்றுத் தாரும்,

உம்மையன்றில் உதவி யாருமில்லை.
உம்மையன்றில் பராபரமே எதுவுமில்லை.

நீரே உயிர்கொடுத்தீர், நீரே உருவாக்கினீர், நீரே உபயமளிப்பீர்.

உண்மையான கடவுளே அசையும் அணுவிலிருந்து ஓடும் நீர் வீசும் காற்று வரை நீர் தீர்மானித்தீர்.
பறக்க பற‌வைக்கு சிறகு கொடுத்தீர், நீந்த மீனுக்கு வால் கொடுத்தீர்..

என்னைப் படைத்தீர், இந்த உடல் கொடுத்தீர், இந்த சொந்தங்களை கொடுத்தீர்..
இங்கு என்னை இட்டு வந்தீர்.. இல்லிடம் கொடுத்தீர், இனிய உணவு படைத்தீர்..

தேடுவோருக்கு தேற்றரவாய் இருந்து கண்டடைய வைத்தீர்..
தட்டுவோருக்கு திடமாய் இருந்து திறக்க வைத்தீர்..

அறியாதவர்களுக்கு ஞானமளித்தீர்.. ஊமைகளுக்கு பேச்சளித்தீர்..

நீர் பாவிகளென்று எவரையும் கைவிட்டதில்லை..
குற்றவாளிகளென்று எவர்க்கும் கொடுங்கோன்மை செய்ததில்லை...

உமது இரக்கம் எதனிலும் மிகுந்ததாக இருக்கின்றது..
உமது கரம் வலியது. இரக்கம் மிகுந்தது..

பரிசுத்த பிதாவே, உம்மிடம் ஏங்கிக் கேட்கின்றேன்..
நீர் உருவாக்கின என்னை உமது சித்தத்தின் படியே நடத்தியருளும்.
அலகையின் செயலால் நான் உம்மிடமிருந்து விலகி விடாதிருக்க என்னை உமது வழியில் நடத்தியருளும்.
எனக்கு உமது கருணையின் கொடையை அளித்தருளும்.

உமது தூய ஆவியால் நிரப்பி என்னை ஆட்கொண்டருளும். அதன் வழியாக நான் உமது சித்தத்தை அடைய உதவி புரிந்தருளும்.

ஆண்டவரே, நோயாளிகளைக் குணப்படுத்தினீர்,பாவிகளை மன்னித்தீர், முடவர்களை நடக்கச் செய்தீர்.
குருடர்களுக்கு பார்வையளித்தீர். அதனிலும் பார்க்க இறந்தவர்களை உயிர்ப்பித்தீர்.

உமது சித்தம் என் மனதிலே இலட்சியமாக விரிந்திட, நான் அதன்வழி நடந்து அதைக் கண்டடைய
நீரே கிருபை செய்வீர். உமது மேன்மை எனது வாழ்வின் மூலமும் வெளிப்படுவதாக.

இவ்வுலக செல்வங்களைத் தேடாது உமது உதவியின் பயனால் பலருக்கும் உதவி புரியவும்,
பலரை மனந்திருப்பவும் என்னை ஒரு கருவியாக்கியருளும்.

என்னை வளர்த்தீர், என்னை கரை சேர்த்தீர். மற்ற‌வர்க்கெல்லாம் கொடுக்காத அரிய பொக்கிஷங்களை எனக்கு அளித்தீர்.
நீரே என்னை இங்கு நடத்தி வந்தீர். நீரே எனக்கு உற்ற உதவி.

ஆண்டவரே, என்னை வழிநடத்தி உமது சித்தத்தை நிறைவேற்ற எனக்கு திடமளித்தருளும்.
உமது கரத்தால் என்னை வலிமைப் படுத்தியருளும்.

ஆண்டவரே, இந்த உலகில் என்னைப் போல பலரை நீர் படைத்திருக்கிறீர். அவர்களுக்கென ஒரு திட்டத்தை வரைந்திருக்கின்றீர். அவர்கள் தேடுவதைக் கண்டடைவார்களாக! அதன் மூலம் அவர்கள் உம்மை மகிமைப் படுத்தவும்
உமது வல்லமையைப் பறைசாற்றவும், உமது தெய்வீகத்தை மற்றவர்களுக்கு உணர்த்தவும் அவர்களுக்கு வலிமையூட்டுவீராக.

நோக்கியா போனில் அன்லிமிட்டெட் கால் வசதி...

நோக்கியா போனில் அன்லிமிட்டெட் கால் வசதி...

என்றென்றைக்கும்..ரீ சார்ஜ் பண்ணதேவையில்ல..

லிமிட்டட் எடிசன் போன்.... சும்மா ஜொலிக்குது...

http://www.kudlabluez.blogspot.com

இந்தியாவா தமிழா? எது தமிழருக்கு நீண்ட காலப்பொழுதிலே நன்மையானதாக அமையும்?

இது வரை இடம் பெற்ற நிகழ்வுகளும்,

போன வருடம் இதே காலம், பல அழிவுகள் எம்மை ஒரு சேர தாக்கின. நாம் நமதுடலில் கடைசித் துளி இரத்தம் சிந்த முன்னர் யாராவது வந்து ஏதாவது செய்து எங்களைக் காப்பாற்றி விடுவார்கள் என்று நம்பினோம்.
 அமெரிக்காவை, பிரித்தானியாவை கெஞ்ச முன்னர் இந்தியா எதாவது செய்து எம்மைக் காப்பாற்றும் என்று நம்பினோம்.
பெண்கள், பிள்ளைகளாவது மிஞ்சுவார்கள் என்றும் நம்பினோம்.
அருகில் ஆறுகோடிப் பேர் இருக்கிறார்கள், அவர்களின் ஒருமித்த எதாவது செயல் எம் தலையில் விழுந்து எம்மை நசிக்கப் போகும் குண்டுகளையும், எம் உடலை சிதைக்கப்போகும் சன்னங்களையும் ஒரு கணம் நிறுத்தும்.
நாங்கள் நன்றாக இருந்தவரை நன்றாக சாப்பிட்டோம், நன்றாக உடுத்தினோம், பக்கத்தில் இருந்த இல்லாதவனோடு பகிர்ந்து கொண்டோம்.
எமக்கு தெரிய யாருக்கும் வினை செய்தோமில்லை.
நாம் செய்யாத பாவம், தேடி வைத்த புண்ணியம் எதாவது நடந்து மண்குளிகளுக்குள் மாதக்கணக்கில் வெம்ம்பும் இந்த வாழ்க்கையிலிருந்து விடுபடுவோம் என்று நம்பினோம்.

உங்களுக்கு நாங்கள் எந்த நன்மையையும் செய்யவில்லை என்றா எங்களைக் கைவிட்டீர்?
எங்களை அரவனைத்தால் உங்கள் ஒற்றுமையை குலைத்து விடுவோம் என்றா எங்களைக் கைவிட்டீர்?

சக இந்தியரான உங்களை எந்தளவில் மதித்தார்கள் இந்த பார்ப்பனீய அரசுகள்?
உங்கள் வளங்களை, உங்கள் உழைப்பை, உங்கள் உரித்துகளை உங்களுக்கே அன்னியமாக்கி உங்களிடமே வாடகைக்கு விட்டு உங்களை சுரண்டிப் பிழைக்கிறது உங்களை ஆளும் அரசுகள்.
உங்களை இன்னும் சாதி, மத தளைகளைக் கட்டிக் காத்து குட்டிச் சுவராக்கும் வகையில் நடந்துகொள்ளூம் உங்கள் தலைவர்களைக் கொண்டு ஆளுகின்றதே இன்னும் புரியவில்லையா உங்களுக்கு!!

உங்களை ஆளும் தலைவர்களுக்குக் கூட‌ உண்மையான சுதந்திரம் இல்லாத போது உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறதா எங்களுக்கு உதவி செய்ய!
உங்களுக்கு என ஒரு குரல் இல்லாதபோது எங்களுக்காக நீங்கள் குரலுயர்த்துவீர்கள் என நாம் நம்பினோமே, அதை விட பெரிய மடமை ஏதாவது இருக்குமா!

உங்களை வடனாட்டு பார்ப்பனன் அடிமையாய் நடத்துவது போல தான், சிங்களவன் எங்களை நடத்தமுயன்றான். நீங்களோ சனத்தொகையில்

உங்கல்