Pages

சும்மா நீட்டிக்கிட்டே போகாம நச்சுன்னு நாலு வார்த்தை..எது எது இப்போதைக்கு கண்ணைக் குத்துதோ அத இங்க‌ வந்து ஆத்திக்கலாம்.

பஞ்சாயத்து ஆகாத வெரசங் கெட்டதுக எதுவெல்லாம் இருக்கோ அத இங்க‌ உண்டு இல்ல பண்ணலாம்னு நாமளும் ஒரு போர்டு போட்டுக்கிட்டு...

சும்மா நீட்டிக்கிட்டே போகாம நச்சுன்னு நாலு வார்த்த

Thursday, June 10, 2010

செபம்

கர்த்தரின் மாதாவே க‌ற்றுத் தாரும், ஆண்டவரே பெற்றுத் தாரும்,

உம்மையன்றில் உதவி யாருமில்லை.
உம்மையன்றில் பராபரமே எதுவுமில்லை.

நீரே உயிர்கொடுத்தீர், நீரே உருவாக்கினீர், நீரே உபயமளிப்பீர்.

உண்மையான கடவுளே அசையும் அணுவிலிருந்து ஓடும் நீர் வீசும் காற்று வரை நீர் தீர்மானித்தீர்.
பறக்க பற‌வைக்கு சிறகு கொடுத்தீர், நீந்த மீனுக்கு வால் கொடுத்தீர்..

என்னைப் படைத்தீர், இந்த உடல் கொடுத்தீர், இந்த சொந்தங்களை கொடுத்தீர்..
இங்கு என்னை இட்டு வந்தீர்.. இல்லிடம் கொடுத்தீர், இனிய உணவு படைத்தீர்..

தேடுவோருக்கு தேற்றரவாய் இருந்து கண்டடைய வைத்தீர்..
தட்டுவோருக்கு திடமாய் இருந்து திறக்க வைத்தீர்..

அறியாதவர்களுக்கு ஞானமளித்தீர்.. ஊமைகளுக்கு பேச்சளித்தீர்..

நீர் பாவிகளென்று எவரையும் கைவிட்டதில்லை..
குற்றவாளிகளென்று எவர்க்கும் கொடுங்கோன்மை செய்ததில்லை...

உமது இரக்கம் எதனிலும் மிகுந்ததாக இருக்கின்றது..
உமது கரம் வலியது. இரக்கம் மிகுந்தது..

பரிசுத்த பிதாவே, உம்மிடம் ஏங்கிக் கேட்கின்றேன்..
நீர் உருவாக்கின என்னை உமது சித்தத்தின் படியே நடத்தியருளும்.
அலகையின் செயலால் நான் உம்மிடமிருந்து விலகி விடாதிருக்க என்னை உமது வழியில் நடத்தியருளும்.
எனக்கு உமது கருணையின் கொடையை அளித்தருளும்.

உமது தூய ஆவியால் நிரப்பி என்னை ஆட்கொண்டருளும். அதன் வழியாக நான் உமது சித்தத்தை அடைய உதவி புரிந்தருளும்.

ஆண்டவரே, நோயாளிகளைக் குணப்படுத்தினீர்,பாவிகளை மன்னித்தீர், முடவர்களை நடக்கச் செய்தீர்.
குருடர்களுக்கு பார்வையளித்தீர். அதனிலும் பார்க்க இறந்தவர்களை உயிர்ப்பித்தீர்.

உமது சித்தம் என் மனதிலே இலட்சியமாக விரிந்திட, நான் அதன்வழி நடந்து அதைக் கண்டடைய
நீரே கிருபை செய்வீர். உமது மேன்மை எனது வாழ்வின் மூலமும் வெளிப்படுவதாக.

இவ்வுலக செல்வங்களைத் தேடாது உமது உதவியின் பயனால் பலருக்கும் உதவி புரியவும்,
பலரை மனந்திருப்பவும் என்னை ஒரு கருவியாக்கியருளும்.

என்னை வளர்த்தீர், என்னை கரை சேர்த்தீர். மற்ற‌வர்க்கெல்லாம் கொடுக்காத அரிய பொக்கிஷங்களை எனக்கு அளித்தீர்.
நீரே என்னை இங்கு நடத்தி வந்தீர். நீரே எனக்கு உற்ற உதவி.

ஆண்டவரே, என்னை வழிநடத்தி உமது சித்தத்தை நிறைவேற்ற எனக்கு திடமளித்தருளும்.
உமது கரத்தால் என்னை வலிமைப் படுத்தியருளும்.

ஆண்டவரே, இந்த உலகில் என்னைப் போல பலரை நீர் படைத்திருக்கிறீர். அவர்களுக்கென ஒரு திட்டத்தை வரைந்திருக்கின்றீர். அவர்கள் தேடுவதைக் கண்டடைவார்களாக! அதன் மூலம் அவர்கள் உம்மை மகிமைப் படுத்தவும்
உமது வல்லமையைப் பறைசாற்றவும், உமது தெய்வீகத்தை மற்றவர்களுக்கு உணர்த்தவும் அவர்களுக்கு வலிமையூட்டுவீராக.

நோக்கியா போனில் அன்லிமிட்டெட் கால் வசதி...

நோக்கியா போனில் அன்லிமிட்டெட் கால் வசதி...

என்றென்றைக்கும்..ரீ சார்ஜ் பண்ணதேவையில்ல..

லிமிட்டட் எடிசன் போன்.... சும்மா ஜொலிக்குது...

http://www.kudlabluez.blogspot.com

இந்தியாவா தமிழா? எது தமிழருக்கு நீண்ட காலப்பொழுதிலே நன்மையானதாக அமையும்?

இது வரை இடம் பெற்ற நிகழ்வுகளும்,

போன வருடம் இதே காலம், பல அழிவுகள் எம்மை ஒரு சேர தாக்கின. நாம் நமதுடலில் கடைசித் துளி இரத்தம் சிந்த முன்னர் யாராவது வந்து ஏதாவது செய்து எங்களைக் காப்பாற்றி விடுவார்கள் என்று நம்பினோம்.
 அமெரிக்காவை, பிரித்தானியாவை கெஞ்ச முன்னர் இந்தியா எதாவது செய்து எம்மைக் காப்பாற்றும் என்று நம்பினோம்.
பெண்கள், பிள்ளைகளாவது மிஞ்சுவார்கள் என்றும் நம்பினோம்.
அருகில் ஆறுகோடிப் பேர் இருக்கிறார்கள், அவர்களின் ஒருமித்த எதாவது செயல் எம் தலையில் விழுந்து எம்மை நசிக்கப் போகும் குண்டுகளையும், எம் உடலை சிதைக்கப்போகும் சன்னங்களையும் ஒரு கணம் நிறுத்தும்.
நாங்கள் நன்றாக இருந்தவரை நன்றாக சாப்பிட்டோம், நன்றாக உடுத்தினோம், பக்கத்தில் இருந்த இல்லாதவனோடு பகிர்ந்து கொண்டோம்.
எமக்கு தெரிய யாருக்கும் வினை செய்தோமில்லை.
நாம் செய்யாத பாவம், தேடி வைத்த புண்ணியம் எதாவது நடந்து மண்குளிகளுக்குள் மாதக்கணக்கில் வெம்ம்பும் இந்த வாழ்க்கையிலிருந்து விடுபடுவோம் என்று நம்பினோம்.

உங்களுக்கு நாங்கள் எந்த நன்மையையும் செய்யவில்லை என்றா எங்களைக் கைவிட்டீர்?
எங்களை அரவனைத்தால் உங்கள் ஒற்றுமையை குலைத்து விடுவோம் என்றா எங்களைக் கைவிட்டீர்?

சக இந்தியரான உங்களை எந்தளவில் மதித்தார்கள் இந்த பார்ப்பனீய அரசுகள்?
உங்கள் வளங்களை, உங்கள் உழைப்பை, உங்கள் உரித்துகளை உங்களுக்கே அன்னியமாக்கி உங்களிடமே வாடகைக்கு விட்டு உங்களை சுரண்டிப் பிழைக்கிறது உங்களை ஆளும் அரசுகள்.
உங்களை இன்னும் சாதி, மத தளைகளைக் கட்டிக் காத்து குட்டிச் சுவராக்கும் வகையில் நடந்துகொள்ளூம் உங்கள் தலைவர்களைக் கொண்டு ஆளுகின்றதே இன்னும் புரியவில்லையா உங்களுக்கு!!

உங்களை ஆளும் தலைவர்களுக்குக் கூட‌ உண்மையான சுதந்திரம் இல்லாத போது உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறதா எங்களுக்கு உதவி செய்ய!
உங்களுக்கு என ஒரு குரல் இல்லாதபோது எங்களுக்காக நீங்கள் குரலுயர்த்துவீர்கள் என நாம் நம்பினோமே, அதை விட பெரிய மடமை ஏதாவது இருக்குமா!

உங்களை வடனாட்டு பார்ப்பனன் அடிமையாய் நடத்துவது போல தான், சிங்களவன் எங்களை நடத்தமுயன்றான். நீங்களோ சனத்தொகையில்

உங்கல்

Sunday, April 25, 2010

நடப்பது என்ன? இன்றைய இந்திய நிலவரம்.. தமிழ் விசுவாசிகள்

இந்த கட்டுரை திருமதி ஜெனிதா பிரதீப்பினால் வரையப்பட்டது! 

=====================================================================

சீமானிடம் கொண்டு செல்லுங்கள் முடிந்தால்..... சீமான் அவர்களுக்கு..... போராட்டங்கள் ஆர்பாட்டங்கள் ஏன்...... எதற்கு


சீமான் அவர்களுக்கு..... போராட்டங்கள் ஆர்பாட்டங்கள் ஏன்...... எதற்கு

இலங்கையில் நடக்க இருக்கும் இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்ள இருக்கும் நடிகர் அமிதாபச்சன் வீட்டின் முன் போர் ஆட இருப்பதாக அறிவித்து உள்ளீர்கள்........ நடிகை ஐஸ்வரியாராயின் திரை படங்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் குறி உள்ளீர்கள்.........

இது ஒரு அவசியம் ஆனா போர் ஆட்டம் தானா???? உங்கள் நாம் தமிழர் இயக்கம் அரசியல் கட்சி ஆகியதில் இருந்து உங்கள் போக்கு செய்கைகள் எல்லாம் மாறு பட்டே கொண்டே இருக்கின்றன... நீங்களும் சாதரணா அரசியல் வாதியின் தரத்துக்கு இரங்கி விட்டிர்கள்........

தமிழனே தமிழனுக்கு துணை போகாத போது ... தன் இனத்தை காட்டி குடுக்கும் போது...... இந்தியக்காரர் ஆனா அமிதபக்சனை எதிர்ப்பது சரியாகுமா???? உங்கள் அரசியல் கோட்பாடு என்ன??? இப்படியே எல்லாரையும் எதிர்த்து ஆனாவசியம் அற்ற விடையங்களுக்கு ஆக போராடுவது தானா?????

தமிழன் கொல்லபட்டதுக்கு முதல் காரணமே இந்தியா தானே???? இந்திய இப்பொழுது பெரிய இரண்டு மாநாடுகளை இலங்கையில் நடத்தி முடித்து விட்டது...இந்தியா இலங்கைக்கு செய்யும் உதவி உலகே அறிந்தது. அப்படி இருந்தும் உலகம் திரும்பி பார்க்கிறதா????

உங்களுக்கு பண பலம் தந்து உதவி செய்யும் வெளி நாட்டுதமிழரை திரிப்த்திபடுதுவதற்கு ஆகவா நீங்கள் சிறை சென்று வந்திர்கள்....போர் ஆட வேண்டிய விடையங்கள் பல இருக்கின்றன... நீங்கள் போராடினாலும் ஆடவிட்டாலும் இந்த விழா நடந்தே தான் தீரும் ... இது நீங்களும் அறிந்த்தது தானே...நீங்கள் ஏன் எங்களை உங்கள் அரசியல் ஆசனத்துக்கு ஆக பயன்படுத்துகுறிர்கள்.. உலக சந்தையில் இப்பொழுது மலிந்து போய் கிடக்கும் ஒரு விட்டயம் ஈழதமிழனின் தனி நாட்டு போராட்டம்.........

நீங்களே சிங்கள பெண்ணை நடிக்க வைத்தவர்...... நீங்கள் நடிக்க வைத்த காலத்திலே இலங்கை பிரச்சனை உங்கள் கண்களுக்கு தெரியவில்லை... ஏன் எம்மை காட்டு மிராண்டிகள் ஆக சித்திகரிக்கிரிர்கள்..... முதலில் உங்கள் தமிழ் சினிமா இந்திய நடிகனை தலையில் தூக்கி வைப்பதை நிறுத்துமா ....

பார்வதி அம்மாவை திருப்பியனுப்பிய பிரச்சனை தீந்து விட்டதா????? அதை பற்றி பல விசையங்கள் அமுக்க பட்டு விட்டன???? இப்படி எல்லா பிரச்சனைக்கும் பாதியிலே போராட்டங்களுடன் விட்டு விட்டு புது பிரச்னைக்குள் செல்கிறிர்கள் .... இது உங்களுக்கே அசிங்கமா தெரியவில்லை........

எங்கள் தலைவன் கச்ற்ற பட்டு உலகுக்கு எடுத்து சென்ற போரை எங்கள் போர் ஆட்டத்தை உங்கள் போல் பன்னாடைகள் தங்கள் சுயநலத்துக்கு ஆகா கேவலம் ஆக்கி செல்கிறிர்களே இது நாயமா???? உங்களை நாங்கள் எங்களுக்கு குரல் குடுப்பதுகு ஆக தேர்ந்து எடுக்கவில்லை... நீங்களே உங்களை தலைவன் ஆக்கி விட்டு ஏன் எங்கள் மானத்தை வாங்குகிரிர்கள்????

நான் வெளி நாட்டில் வாழ்ந்தாலும் ஈழத்தில் பிறந்த தமிழ் பெண்.. பல கோடி தமிழரில் நானும் ஒருத்தி என்னை நீங்கள் வியாபார பொருள் ஆக்குவதை பொருத்து கொள்ள முடியாது.... உங்கள் அரசியல் போக்கை பற்றி சிந்தியுங்கள்....

தமிழனின் தாகம் தமிழீழதாயகம்
ஈழமகள்
ஜெனித்தா
உங்களுக்கு பண பலம் தந்து உதவி செய்யும் வெளி நாட்டுதமிழரை திரிப்த்திபடுதுவதற்கு ஆகவா நீங்கள் சிறை சென்று வந்திர்கள்..?
 
 ================================================================
 
அதற்கு பலராலும் சூடான பதில்களும் விமர்சனங்களும் வழங்கப்பட்டுக்கொண்டுள்ளது!
அவர்களின் பதில்களும் வருமாறு!!!

உங்கள் நியாயங்களை நீங்களும் வரிசைப்ப‌டுத்துங்கள்

=================================================================

ஜெய் றோபி..


சரிதான் அக்கா..... கேடுகெட்ட இந்தியாவும், அமிதாப்பும் தமிழருக்கெதிராக செய்யும் இம்மாபாதக செயலை கண்டு அமைதியாக இருக்க சொல்கிறீர்களா ???????

==================================================================

திருமதி ஜெனிதா பிரதீப்..

அமிதாப் தன்னை ஒரு இந்தியன் ஆக பலமுறை வெளி காட்டி உள்ளார்...... நாம் தமிழர்களே ஒற்றுமையாக இல்லையே ........ இங்கே அரசியல் தான் என் கண்களுக்கு தெரிகிறது...... கொன்றான்... எம்மை கொன்றார்கள் ..எம்மை கொல்லவைத்தார்கள்... யார்.... அமிதாப்பின் மனிதாபிமான செய்யல் இது........ நமக்கு இந்த போர் ஆட்டம் அனாவசியம் ஆனது... எமது போர் ஆட்டங்கள் வரை அறையை மீறி செல்கிறது......... இது உலகுக்கு எம்மை ஒரு நலிந்த பொருள் ஆக்கி செல்கிறது... எதற்கு ஆக போர் ஆடுகிரம் என்ற வரை முறை இல்லை.. தமிழ் சினிமாவில் தமிழ் பெண்களை எவ்வளவோ கேவலமாய் சித்திகரிக்கிரார்கள்.. ஆனால் ஜெயராம் தமிழ் பெண்ணை கிண்டல் அடித்த போது அவர் வீட்டை அடித்து ஒடுக்கிராராய்...இது என்ன .... நீ செய்வது உனக்கே கோமாளி தனமாய் இல்லை.. முதலில் திருத்து உன் இனத்தை... முதலில் தட்டி கேள் என்னை..... நீ தேவை இல்லாமால் இலங்கை பிரச்னையை பற்றி போராட வெளிக்கிட்டு விட்டு இப்பொழுது அனாவசியம் அற்ற பிரச்சனைக்கு ஆக போர் ஆடுகிறாய்.. இந்திய நேற்று இலங்கையில் கல்வி மாநாடு நடத்தியதே ..... வன்னியில் இன்னும் பாடசாலையே இல்லையே .... இந்திய பழுக்கும் காவல் பூனைக்கும் காவல்.... என்னை பொறுத்தவரை இது ஒரு அனாவசியம் ஆனா போர் ஆட்டம்....
 
========================================================================
 
சுந்தரவேள் ஈழவன்..
நிம்மதியாக சிங்களவன் இனி ஒரு பொழுதும் தூங்கக் கூடாது!

========================================================================

காரை மணிவண்ணன்...
 
சூப்பர். கடந்தவருட மாவீரர் தினத்திற்கு கனடா வந்த சீமானை கனடியப்பொலிசார் நாடுகடத்தியிருந்தனர். விமானநிலையத்தில் தடுத்துவைத்து விசாரணைசெய்யும்போது சீமான் கூறினாராம் புலிகளுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லைஎன்று. ஆனால் இந்தியாசென்றதும் பழையபடி அவருக்கு புலி விசுவாசம் வந்தது எப்படிஎன்று தெரியவில்லை. இவர்கள் போலிகள்.

=========================================================================

ஜீவகுமார்...

ஜெனித்தா உங்கலுக்கும் கறை க்கும் சீமானை பற்றி என்ன தெரியும் நீங்கள் சீமானை ஓரு இந்தியனாக பார்க்கின்றிர்கள் சீமான் ஒர் இந்தியன் அல்ல அவர் ஒர் தன்மானமுள்ள ஒர் தமிழன் அவர் எங்கள் ஈழ தமிழர்களை நெசிப்பவர் எம் மாபேரும் தலைவருக்கும் சீமானுக்கும் உள்ள தோடர்பு உங்கலுக்கு தெரியுமா நீங்கள் உங்களுக்கு நெரம் போகவில்லை என்பதற்காக எங்கள் ஈழத்தையும் இதற்குள் தயவு செய்து கோன்டு வரவென்டாம் நாங்கள் இங்கெ நோந்து வெந்து வெதனையின் வடு மாறாமல் இருக்கும் போது நீங்கள் இப்படி எங்கள் உறவுகளை கேவலமாக விமர்சிப்பது எனக்குப் பிடிக்கவில்லை என்போன்ற வர்களுக்கும் ஈழத்தை உயீராக நேசிப்பவர்களும் இதை விரும்ப வில்லை தயவுகூர்ந்து இப்படி எமக்காக எம் நாட்டுக்காக உளைப்பவரை கேவலம் செய்ய வேன்டாம் இந்த தகவலை உடன் நீக்கவும் இப்படிக்கு ஈழத்தின் ஓர் உரிமைக் குரல்....
 
=========================================================================
 
தீபன் பிரபா..
சீமான் இயன்றதை செய்கிறார்.  எங்களுக்காக குரல் கொடுப்பவர்களைக் குறைத்து விடாதீர்கள். 

==========================================================================

நிழல் மனிதன்...
ஜீவகுமார் இது 30 வருடபோராட்ட வரலாறு. உமக்கு, எமக்கு 15 வருடமாகத்தான் தெரியும் இந்தப்போராட்டம் பற்றி இதற்கு முதல் இந்த சீமான் எங்கு போனார். இப்போது யாரைவைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்கின்றார். புலிப்படம் போட்டால், எடுத்தால் மட்டும் புலியாகாது களத்தில் எம்மோடு வருவாரா போராட தலைவரோடு இவர்மட்டும் அல்ல பலர் இருந்தவர்கள். இதில் முதன்மையானவர் பழநெடுமாறன் புரியுமா.
 
======================================================================

காரை மணிவண்ணன்..
ஜீவகுமார் அறிவு பூர்வமாக சிந்தித்தால் பிரச்சனை எழவாய்ப்பில்லை மாறாக உணர்வு பூர்வமாக சிந்திப்பதால் பலபிரச்சனைகள் எழும் உதாரணம் நோர்வேயில் 7 தமிழர்கள் சிறையில் அவர்களை மீட்கயாரும் முன்வரவில்லை. அவர்கள் நிலை புரியுமா உமக்கு. உணர்ச்சி வசப்பட்டால் இப்படித்தான் முடிவுவரும்.
 
=======================================================================
பாக்கியராசன்..
முதலில் மரியாதையாக பேச தெரியாத பன்னாடையாக இருந்தாலும் பதில் மரியாதையுடன் தருவது என்ற முனைப்பில் முடிந்தவரை மரியாதையாக பதில் தர முயற்சிக்கிறேன்...

கொஞ்சம் கூட அரசியல் அறிவில்லாத நபர எழுதும் கட்டுரைக்கு பதில் தருவது இழுக்கு என்றாலும் இந்த கட்டுரையை படித்துவிட்டு சூப்பர் என்று கைதட்டும் அறிவிளிகளுக்க்காகவும், அக்கா என்பதற்காக இந்த கட்டுரையையும் விரும்பி அண்ணன்களை அடகுவைக்க முயலும் "இளம்புலி"களுக்காகவும் பதில் தர வேண்டி இருக்கிறது...

=======================================================================

பிரஷான் பிரபா...
 //இப்படியே எல்லாரையும் எதிர்த்து ஆனாவசியம் அற்ற விடையங்களுக்கு ஆக போராடுவது தானா?????///

இப்பிடி எல்லாம் நினைத்து தான் நம் இப்ப ரோட்டைல நிக்குறம்
சீமான்  அண்ணா செய்வது சரி..

========================================================================

பாக்கியராசன்..
இந்த IIFA விழா பல நாடுகள் நடத்த தயாராய் இருக்கிற பொழுது இலங்கையில் நடத்த காரணம் என்ன என்பதை சிறு குழந்தை கூட அறியும்.. கடந்த வருடம் முள்ளிவாய்க்கால் கொடூரத்தை மறைக்க இந்திய-இலங்கை கூடு சதியின் ஒரு பகுதி தான் இந்த விழா.. முழுக்க முழுக்க உலகின் கவனத்தை திசை திருப்பவும், அந்த நாட்டின் வெளிநாட்டு பயணிகளின் வருகையை கூட்டி வளம் கொழிக்கவும் நடத்தப்படும் இந்த விழாவை எதிர்ப்பது முள்ளிவாயக்காலில் சொந்தங்களை இழந்த ஒவ்வொருவரின் கடமை... அதிலும் அமிதாப் அவர்கள் இலங்கை சென்று வந்து சிங்களர்கள் எல்லாம் பெரிய மனது படைத்தவர்கள் என்று கூறியதை கண்டிப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை.. அதில் ஒரு பங்கு தான் IIFA வை பிரபலபடுத்தும் அமிதாப்பின் வீட்டை முற்றுகை இட்டு நாம் தமிழர்கள் இயக்கதினரின் போராட்டம்.

http://meenakam.com/?p=14416

நேற்று போராட்டம் நடந்தது. IIFA இயக்குனர்கள் நால்வரும் வந்து போராட்டக்காரர்களின் கருத்தை அறிந்து விழா நடத்தும் இடத்தை மாற்றுவதை பற்றி யோசிக்கிறோம் என்று கூறி இருக்கிறார்கள்.. அமிதாப்பும் தமிழர்களின் உணர்வுகளை புரிந்துகொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.. இதற்காக மாற்றுவார்கள் என்று கூறும் அளவிற்கு நான் முட்டாள் இல்லை.. ஆனால் நேற்று இந்த போராட்டதை அனைத்து ஊடங்கங்களும் ஒளிபரப்பின.. பலருக்கு செய்தி சென்றடைந்தது.. இதுவரை ஒரு முறை கூட செய்தி போடாத வட இந்திய பார்பன ஊடகங்கள் நேற்று சென்ற வருட பயங்கரத்தை பற்றியும் இன்னும் சொந்தங்கள் முள்வேலிக்குள் முடங்கி கிடக்கிறார்கள் என்பதை பற்றியும் செய்தி வெளியிட்டன...... 
 
 
எல்லாவற்றிக்கும் தான் நாம் தமிழர் இயக்கமும் சீமானும் போராடுகிறார்கள்.. அமிதாபை எதிர்த்து ஏன் போராடவேண்டும் என்ற உங்கள் கேள்விக்கு மேல உள்ள செய்திகள் தான் பதில். இதற்க்கு மேலும் இது அவசியமா அனாவசியமா என்று யோசித்தால் நீங்கள் ஈழமக்களின் நலம் மேல் கொண்டுள்ள எண்ணத்தை தான் சோதிக்கவேண்டும்...
 
இன்றைய சூழ்நிலையில் புலம் பெயர் தமிழர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டார்கள்.. எல்லாம் வீட்டினுள் முடங்கி விட்டார்கள்.. ஈழமக்களுக்காக போராட்டம் நடப்பது தமிழ்நாட்டிலும், நடத்துவது தமிழ்நாட்டு தமிழர்களும் தான்.. நீங்கள் உண்மையான ஈழதமிழர்கள் நன்றி தான் சொல்லவேண்டும்.. நீங்கள் திட்டுகொண்டு இருக்கிறீர்கள்,.. தயவு செய்து அரசியல் தெரியவில்லை என்றால் வாயை மூடி கொண்டு இருங்கள்.. ஏதாவது உலரிகொட்டி அதுக்கும் வேட்டுவைக்கதீர்கள்...
சரி சீமானுக்கு எந்த புலர் பெயர் சீமான்களும் சீமாட்டிகளும் பணத்தை அள்ளி கொட்டுகிறார்கள் என்று சொல்லுங்களேன்.. ஏதோ நீங்கள் பார்த்தது போல் பேசுவது சீமான் மேல் இருக்கும் உங்கள் வன்மத்தை காட்டுகிறது... சரி அப்படியே பணத்தை கொட்டி கொடுத்தால் வாங்கி வைத்துக்கொண்டு வீட்டில் உட்கார்ந்து கொண்டு அறிக்கை மட்டும் விடலாமே.. எதற்கு சீமான் சிறைக்கு சென்று கஷ்டப்படவேண்டும்... இன்னொன்று எந்த புலம் பெயர் ஈழ தமிழர்கள் அந்த நாட்டு அடக்குமுறையை மீறியும் சிறை சீமானை போல் பல தடவை சென்றார்கள் சென்று சொன்னால் நன்றாக இருக்கும்.. உங்கள் வீட்டில் இருந்து எதனை பேரு போனார்கள் சிறைக்கு என்று சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும்.. இந்த கட்டுரை எழுதிய உங்களின் தகுதியை இதற்க்கு பதில் சொன்னால் ஊர் உலகம் தெரிந்துகொள்ளும்.
 
ஓ ஈழத்தமிழர்களை பேசினால் தமிழ்நாட்டில் ஒட்டு போட்டு முதல்வர் ஆக்கிவிடுவார்கள் என்ற கனவில் இருக்கிறீர்களா?.. அப்படி ஏதாவது இருந்தால் உங்களை போன்ற முட்டாள் உலகில் வேறு யாரும் இல்லை... தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களை பற்றி பேசி அரசியல் நடத்தினால் திருவோடு தான் மிஞ்சும்.. வைகோவை பார்த்தீர்கள் தானே... இருந்தாலும் அவர்களுக்காக பேசுவது தமிழர்கள் என்ற உணர்விலதானே ஒழிய வேறொன்றும் இல்லை.. அதை முதலில் மனதில் வைத்து பேசுங்கள்.. இந்தியா மனசுவைக்காமல் ஈழத்தில் ஒன்றும் நடக்காது என்ற சூழ்நிலையில் உங்களை பற்றி பேசி அரசியல் செய்ய அவர்களாவது இருக்கிறார்களே என்று சந்தோசபட்டு அதரவு அளிக்கவேண்டும் நீங்கள்.. ஆனால் நீங்கள் முட்டாள் தனமாக திட்டி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்...
 
இங்கே ஒரு அறிவாளி சீமான் கனடா பொலிசாரால் கைது செய்ய பட்ட பொழுது ஏதோ சொன்னார் என்று அவருக்கு தெரிந்த உண்மையை கூறி இருக்கிறார்.. சீமான் கனடாவில் கைது செய்யப்பட்ட பொழுது அவரோடு உடன் இருந்தவன் என்ற முறையில் அவர் மீண்டும் விமானம் ஏறும் வரையில் கூட இருந்தவன் என்ற முறையில் மேலே சொன்ன கருத்து முழுவதும் பொய் என்று கூறமுடியும்... எதை ஆதாரமாக வைத்து அவர் இப்படி சொன்னார் என்று தெரியவில்லை... இப்படி பட்டவர்கள் இருப்பதால் தான் நம் இனம் இன்றும் இப்படி இருக்கிறது.. வாய் இருப்பதற்காக பேச வரும் இந்த மாறி நபர்களை முதிலில் ஒழித்தால் தான் இனம் உருப்படும்..

 
========================================================================
 
 
 இந்த கட்டுரை பலரை சென்றடைய வேண்டும். அதன் மூலம் நாம் நமது கருத்து வேறுபாடுகளை ஆக்கபூர்வமான முறையில் களைந்து கொள்ளவேண்டும் என்ற கோட்பாட்டிலே இதனை இங்கு பிரசுரம் செய்கின்றோம்.

உங்களது கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 

Saturday, April 24, 2010

சும்மா அதிரல்ல..எல்லாத்தயும் அதிரவைச்சு அதிருது!!!



என்னென்னமோ நடக்குது இந்த உலகத்திலே!!!

சும்மா சூப்பரா அதிர வைக்கிறாங்க! எப்பிடி இருக்கிறாரு இளைய தளபதி!

என்னய்யா சூப்பர் ஸ்டார கண்டுக்காம இளைய தளபதி நொள்ள தளபதின்னுக்கிட்டு!

யாருய்யா சூப்பர் ஸ்டாரு இதிலன்னு கேட்க மாட்டீங்கன்னு தெரியும்.
யாராச்சும் நம்ம சொத்தப் பச்சனை சூப்பர் ஸ்டார்னு நெனச்சா நா பொறுப்பில்ல.

சிறீ லங்காவில ஒரேயொரு சூப்பர் ஸ்டாரு தான்.
அவரு போடுவாரு சூப்பர் பல்டி, வைப்பாரு எல்லருக்கும் அல்வா,

இன்னும் இருக்கு நெறய பாக்குறதுக்கு.
இளைய தளபதி கூட சும்மா ஜொலிக்கிறாருல்ல!

._,___

 

Friday, April 23, 2010

இப்பிடியும் Tattoo குத்திக்கலாமுன்னு சொல்றாங்கய்யா...

இப்பிடியும் குத்திக்கலாமுன்னு சொல்றாங்கய்யா...

புதுசா என்ன பண்ணலாமுன்னு யோசிக்கிறதையே வேலையா வெச்சிருக்காங்கய்யா. புதுசு புதுசா எதாச்சும் பண்ணி எப்பிடியாவது நம்பள வாய் பிளக்க பண்றாங்க.!



weirdos:-
















இனி மெல்லச் சாவோம் நாமெல்லாம் நாறிப் போவோம்.. நமக்கு வரும் இழிவாழ்வு..

கருணா ‍ மீள்குடியேற்ற அமைச்சர்..

டக்ளஸ் சிறு கைத்தொழில் அமைச்சர்..

இவர்களால் புண்பட்ட தமிழினம் மேலும்
இழிவடையப் போகிறது.

நாளை எம்மை ஆயுதங்கள் ஆளும்..



ஆயுதம் வைத்திருப்பவன் பலசாலியாகவும், மதிக்கப்
படுவனாகவும் இவர்களும் இவர்களை பின் தொடர்பவர்களும்
ஏற்படுத்துவார்கள்.

பலகாலமாக காப்பாற்றி வந்த் கலாசாரத்தை
சமூக விழுமியங்களை இவர்களும் இவர்களை
பின்பற்றுவாரும் முன்னின்று அழிவுபடுத்துவார்கள்.

பல்கலைக்கழகமாக விளங்கிய மண் இனி பல்'கொலைக்'களமாகவும்,
சமூக சிதைவை பல கோணங்களில் உள்வாங்க வேண்டியும் வரும்.

IPL இல வென்றவங்க இவங்க மட்டும் தான்!

அறிவறிதல் அன்பில் நட்பறிதல்

அறிவறிதல் அன்பில் நட்பறிதல் நட்பில் உறவறிதல் நான் எனது நட்பை பெரிதும் விசாரித்து அறிவதில்லை அவர்கள் ரசனையே அவர்களை யார் எனச் சொல்லும் அவர் உறவுகள் யார் யார் எனத் தெரியும் ஆவலும் இல்லை ஒருவர் உள்ளம் அறிந்தால் போதும் என்னைப் போலே என்னுடன் பழகுபவர் சிலர் இருக்கக் கண்டு மிக்க மகிழ்ச்சி அறிவியல் விடுப்பு ஆகாது என்பது எனது எண்ணம் ஆனால் நாம் வாழும் சமுதாயத்தில் இது இன்னும் பழக்கத்திற்கு வரவில்லை

Thursday, April 15, 2010

Wednesday, April 14, 2010

பொக்கிஷமான பெரியாரின் பேச்சு.............

சார் யாராச்சும் youtube வீடியோவை எப்படி blog இல் இணைப்பதுன்னு சொல்லித் தாங்கப்பா.
ரொம்ப கஷ்டப் பட்டுட்டேன்.


Tuesday, April 13, 2010

யாரோ சொன்னது

நீ இருக்க வேண்டிய இடத்தில் இருக்கும் வரை தான் உனக்கு  மதிப்பும்  மரியாதையும். எங்கே உனக்கு உகந்த இடமில்லையோ அங்கே நீ மதிப்பினை இழந்து உன் திறமைகளை மழுங்கடித்துக் கொள்வாய். மற்றவர்கள் உன்னை அறிந்து கொள்ள மாட்டார்கள். " யாரோ சொன்னது"

Monday, April 12, 2010

நமீதாம்மா..

நமீதாம்மா

  

 
 

                        
 
 
 
மதிகா அம்மா 

 
 
           

எவன் பொண்டாடிய எவன் சொந்தங் கொண்டாடறது!!!

புலம் பெயர் தமிழர்கள் தமிழீழ விடுதலை புலிகளுக்கு வழங்கிய
நிதி மூலம் வாங்கப்பட்ட நாடு கடந்த சொத்துக்களை இலங்கைக்கு மீள‌
கொண்டுவருவோம், நாடு கடந்த அரசாங்கத்தை முடக்குவோம்..இப்பிடீன்னெல்லாம்
கொக்கரிக்கிறாங்கய்யா.

எவனுக்காவது அது கண்ணுக்கு படுகுதா?

விசிறிகள் வீசும் எலும்புத் துண்டுகளுக்கு வாலாட்டும்
புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள்...
புரிஞ்சாச் சரி..
இல்லனா...
(மீதிய சொன்னாத்தான் புரியணுமா!!!)

"பையா" .. சும்மா கிழராதீங்க.. அப்புறம் நாறடிச்சுருவேன்..

பையன், பொண்ணு, காரு..பொண்ணு, காரு, பையன்.. அப்புறம், பையன், பொண்ணு, போன்கால், காரு..
அப்பறம், பையன், பைட்டு, பொண்ணு, காரு...

படம் சூப்பராயிருக்குன்றாங்கய்யா...